ராகுல் காந்தி சவாலை ஏற்கிறோம்: பிரதமர் மோடி முழக்கம்..!

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (17:42 IST)
நாங்கள் மோடி என்ற தனிமனிதரையோ அல்லது பாரதிய ஜனதா கட்சியையோ எதிர்த்து போராடவில்லை என்றும் சக்தியை எதிர்த்து போராடுகிறோம் என்றும் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரதமர் மோடி நாங்கள் சக்தியை வணங்குகிறோம் அவர்கள் சக்தியை அழிக்க சபதம் ஏற்கிறார்கள், அந்த சபதத்தை நான் ஏற்கிறேன் என்று தெரிவித்தார்.
 
இன்று தெலுங்கானாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம் என்றும் ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு மகளும் சக்தியின் வடிவம் என்றும் நாங்கள் அந்த சக்தியின் வடிவத்தை வணங்குகிறோம் என்றும் இந்த பாரத தேசமே சக்தியை வணங்குகிறது என்றும் ஆனால் எதிர்கட்சிகள் சக்தியை அழிக்க துடிக்கின்றன என்று பேசினார் 
 
முன்னதாக இந்திய ஒற்றுமை நீதி நடை பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை வகிக்கும் கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் தீய சக்தியை எதிர்த்து தான் போராடுகிறோம் என்றும் இந்த சக்தி வாக்குப்பதிவு இயந்திரம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ,சிபிஐ போன்ற அம்சங்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments