Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (13:40 IST)
ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை!
சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர்கள்லுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக ரிஷி சுனக் அவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது
 
இந்த மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து பல தலைவர்கள் வந்து இருந்தார்கள் என்பதும் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments