ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

Mahendran
செவ்வாய், 8 ஜூலை 2025 (12:07 IST)
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில், ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து வந்த ஒரு பக்தர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத்தை சேர்ந்த 65 வயது பக்தரான சுரேந்திர ஷா என்பவர் நேற்று மாலை பத்மநாப சுவாமி கோவிலுக்கு தனது மனைவி, சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்துள்ளார். அப்போது, அவரது கண்ணாடியில் வழக்கத்திற்கு மாறான பளபளப்பை பார்த்த பாதுகாப்பு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த கண்ணாடியை சோதனை செய்தபோது, அதில் ரகசியமாக வைக்கப்பட்ட கேமராக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
கோயில் விதிகளை மீறிய செயல் என்பதால், சுரேந்திர ஷா கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் கூப்பிடும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்த பின்னர், அவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
 
ஆரம்பகட்ட விசாரணையில், அவர் எந்தவிதமான தீய நோக்கத்துடனும் இருந்ததாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments