Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்திற்குள் சுற்றி வந்த புறாக்கள்! – தாமதமான விமானம்!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (15:50 IST)
ஜெய்ப்பூர் சென்ற கோஏர் விமானத்திற்குள் புறாக்கள் இரண்டு புகுந்ததால் விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூர் புறப்பட கோஏர் நிறுவன விமானம் ஒன்று தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் அமர்ந்ததும் சில நிமிடங்களில் புறப்பட விமானம் தயாராக இருந்தபோது விமானத்திற்குள் இரண்டு புறாக்கள் இருப்பதை பணிப்பெண்கள் பார்த்திருக்கிறார்கள்.

அவற்றை விமானத்தை விட்டு வெளியேற்ற அவர்கள் முயற்சிக்க அவை விமானத்திற்குள் அங்குமிங்குமாக பறந்துள்ளன. பல நிமிட போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக திறந்திருந்த கதவு வழியாக அவை வெளியேறியிருக்கின்றன. புறாக்களின் இந்த சேட்டையால் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

புறாக்கள் விமானத்திற்குள் அங்குமிங்கும் பறந்ததை விமானத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments