Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்திற்குள் சுற்றி வந்த புறாக்கள்! – தாமதமான விமானம்!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (15:50 IST)
ஜெய்ப்பூர் சென்ற கோஏர் விமானத்திற்குள் புறாக்கள் இரண்டு புகுந்ததால் விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூர் புறப்பட கோஏர் நிறுவன விமானம் ஒன்று தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் அமர்ந்ததும் சில நிமிடங்களில் புறப்பட விமானம் தயாராக இருந்தபோது விமானத்திற்குள் இரண்டு புறாக்கள் இருப்பதை பணிப்பெண்கள் பார்த்திருக்கிறார்கள்.

அவற்றை விமானத்தை விட்டு வெளியேற்ற அவர்கள் முயற்சிக்க அவை விமானத்திற்குள் அங்குமிங்குமாக பறந்துள்ளன. பல நிமிட போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக திறந்திருந்த கதவு வழியாக அவை வெளியேறியிருக்கின்றன. புறாக்களின் இந்த சேட்டையால் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

புறாக்கள் விமானத்திற்குள் அங்குமிங்கும் பறந்ததை விமானத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments