Publish Date: Thu, 13 Jul 2017 (13:29 IST)
Updated Date: Thu, 13 Jul 2017 (21:05 IST)
பிணவறை உதவியாளர் தற்காலிக பணிக்கு பிஎச்டி மற்றும் எம்பில் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மால்டா அரசு தலைமை மருத்துவமனையில் பிணவறை உதவியாளர் தற்காலிக பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. கல்வி தகுதி எட்டாம் வகுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு முடித்த பிஎச்டி மற்றும் எம்பில் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு பிஎச்டி முடித்தவர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.