Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 ரூபாய் கொடுத்ததால் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்..!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (15:51 IST)
பெட்ரோல் போட்ட பின் 2000 ரூபாய் கொடுத்ததால் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பங்க் ஊழியர் போட்ட பெட்ரோல் உறிஞ்சி எடுத்த சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 2000 ரூபாய் நோட்டு பெறப்படும் என்றும் பேருந்து மற்றும் ரயில்களிலும் டிக்கெட் எடுக்க 2000 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட பிறகு 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார். ஆனால் அந்த நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் ஊழியர் வேறு நோட்டு தருமாறு கூறினார்
 
தன்னிடம் வேறு நோட்டு இல்லை என்று வாகன ஓட்டி  கூறியதை அடுத்து போட்ட பெட்ரோலை வாகனத்தில் இருந்து அந்த பங்க் ஊழியர் உறிஞ்சி எடுத்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments