Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு தள்ளுபடி !

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (12:35 IST)
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவான அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும் கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்டில் பலரின் சார்பில் வழக்குகள் தாக்குகள் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமூகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில்  ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது. அதன்படி இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
 
மதுரை ஐகோர்டின் உத்தரவுக்கு எதிராக தென்கால் விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் சார்பில் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இது எங்கள் பாரம்பரிய உரிமை எனவும், மதுரை உயர் நீதிமன்றம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு  நடத்த அமைத்துள்ள பாரம்பரிய உரிமைக்கு எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு இன்று சுப்ரீம் கோர்டில் தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments