Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (11:21 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம் மற்றும் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போன்ற இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். 
 
இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் போன்றோர் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அதில், உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றது.
 
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றும், இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும், அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments