Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பழிப்பு குற்றவாளியை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற பொதுமக்கள்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (15:14 IST)
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளியை பொதுமக்களே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது போன்ற பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் அருணாச்சலபிரதேசத்தில் கடந்த 12 ஆம் தேதி, இளைஞர்கள் இருவர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். வழக்கை விசாரித்த போலீஸார் குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனையடுத்து சிறுமி என்றும் பாராமல் இந்த கொடிய செயலை செய்த இளைஞர்கள் மீது கோபத்தில் இருந்த ஊர்மக்கள், காவல் நிலையத்திற்கு சென்று லாக்கப்பை உடைத்து 2 குற்றவாளிகளையும்  தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் இருவரும் இறந்தனர். பின்னர் இருவரது பிணங்களையும் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொதமக்களின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்