Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை குதறியெடுத்த வெறி நாய்கள் - வீடியோ எடுத்த பொதுமக்கள்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (15:31 IST)
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்துக் குதறிய போது, அந்த சிறுவனை காப்பாற்றாமல் அங்கிருந்த பொதுமக்கள் வீடிய எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கூலித் தொழில் செய்யும் தம்பதியின் 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். 
 
அப்போது தெருவில் சுற்றித் திரிந்த சில வெறி நாய்கள் சிறுவனின் மீது பாய்ந்து குதறின. அதைப் பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டாமல், தனது செல்போன்களால் வீடியோ எடுத்துள்ளனர்.  அதன் பின் சிறுவனின் பெற்றோர் ஓடி வந்து, நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 
 
ஆனால், சிறுவனின் உடலில் பல இடங்களில் வெறி நாய்கள் கடித்ததால், அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
அந்த தெருவில் வெறி நாய்கள் சுற்றி வருவதாக ஒரு வாரத்திற்கு முன்பே நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுவனின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

எந்த வேலையையும் நிறுத்தக் கூடாது! அப்பல்லோவில் இருந்தபடியே ஆலோசனை செய்யும் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments