Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்களா? இரட்டை குழந்தைகள் பெயர் கோவிட் – கொரோனா!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (12:45 IST)
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்க அதை தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயராக சூட்டியுள்ளனர் தம்பதினர் ஒருவர்.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அச்சமும், அதிர்ச்சியும் கொள்ளும் அளவிற்கு கொரோனா பெரும் உயிர்கொல்லி நோயாக மாறியுள்ளது. கொரோனாவால் உலக அளவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா என பெயரிடுவது தற்போது ட்ரெண்டாகி வருவதாக தெரிகிறது. சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா என பெயரிட்டிருப்பதாக செய்திகள் பரவின. தற்போது ராய்ப்பூரில் ப்ரீத்தி வர்மா என்ற பெண் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். அந்த குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கொரோனா என்றும், பெண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெயரிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா தான் குழந்தைகளை பெற எதிர்கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு இந்த பெயரை வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments