Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் சீறிய பவர்ஸ்டார் பவன் கல்யாண்! – வீடியோவால் சர்ச்சை!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (11:00 IST)
ஆந்திராவில் அரசு இடித்த வீடுகளை பார்வையிட பவன் கல்யான் காரின் மேல் அமர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட நடிகர் பவண் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது அவர் காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டிருக்க, மேலும் பலர் காரை சுற்றி தொங்கியபடி அதிவேகத்தில் பயணித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ள நிலையில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணித்த பவண் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments