Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம நோயால் 17 பேர் மரணம்! தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட காஷ்மீர் கிராமம்!

Prasanth Karthick
வியாழன், 23 ஜனவரி 2025 (10:51 IST)

காஷ்மீரில் உள்ள பதால் கிராமத்தில் மர்மமான முறையில் பலர் இறந்து வருவதால் அந்த கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற கிராமத்தில் டிசம்பர் மாதத்தில் நடந்த ஒரு விருந்தில் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு வீட்டை சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பலியாகியுள்ளார்கள்.

 

அதன் பின்னர் மற்றொரு குடும்பத்தில் அதே அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பலியானார்கள். அடுத்தடுத்து அதே அறிகுறிகளுடன் பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.

 

இவ்வாறு தொடர்ந்து 17 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் அவர்களது மரணத்திற்கான காரணத்தை அறிய முடியாமல் அரசு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது உணவு ஒவ்வாமையால் ஏற்பட்டதா அல்லது ஏதேனும் தொற்று வியாதியா என கண்டறிய இறந்தவர்களின் உடல் மாதிரிகள் இந்தியாவின் பல்வேறு முன்னணி ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

இதில் சரியான ஒரு புரிதல் கிடைக்கும் வரை பாதுகாப்பை நிலப்படுத்த பதால் கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் வெளியாட்கள் யாரும் அந்த கிராமத்திற்கு அனுமதி இன்றி செல்லமுடியாது. மேலும் அந்த கிராமத்தில் புழங்கப்படும் தண்ணீர், உணவுப்பொருட்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments