Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேற யாரும் ஸ்பான்சர் பண்ணலைனா நான் வருவேன்! – ஐபிஎல் விவகாரம்; பாபா ராம்தேவ் விளக்கம்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:56 IST)
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்கு பதஞ்சலில் நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை என மறுத்துள்ள நிறுவனர் பாபா ராம்தேவ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் சீன செயலிகள், நிறுவனங்கள் பல தடை செய்யப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன செல்போன் நிறுவனமான விவோவும் விலக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் இடத்திற்கு காலியிடம் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பதஞ்சலில் நிறுவனர் பாபா ராம்தேவ் இதுவரை ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பிற்கு முன்வராத நிலை ஏற்பட்டால் அப்போது பதஞ்சலி ஸ்பானசராக வரும் என கூறியுள்ளார்.

மேலும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ள அவர் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் பெற சொல்லி பலர் தன்னிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments