Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேற யாரும் ஸ்பான்சர் பண்ணலைனா நான் வருவேன்! – ஐபிஎல் விவகாரம்; பாபா ராம்தேவ் விளக்கம்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:56 IST)
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்கு பதஞ்சலில் நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை என மறுத்துள்ள நிறுவனர் பாபா ராம்தேவ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் சீன செயலிகள், நிறுவனங்கள் பல தடை செய்யப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன செல்போன் நிறுவனமான விவோவும் விலக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் இடத்திற்கு காலியிடம் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பதஞ்சலில் நிறுவனர் பாபா ராம்தேவ் இதுவரை ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பிற்கு முன்வராத நிலை ஏற்பட்டால் அப்போது பதஞ்சலி ஸ்பானசராக வரும் என கூறியுள்ளார்.

மேலும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ள அவர் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் பெற சொல்லி பலர் தன்னிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments