Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வைரஸ் ரெடி: மழைக்காலத்தில் வேகமாக பரவும் என தகவல்!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (11:52 IST)
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி வரும் வைரஸால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மனிதர்களை ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் செல்லப்பிராணிகள் உள்பட விலங்குகளை பார்வோ வைரஸ் என்ற வைரஸ் தாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த வைரஸ் குறிப்பாக நாய்களை அதிகம் தாக்கும் என்றும் மழைக்காலங்களில் இந்த வைரஸ் நாய்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பார்வோ வைரஸ் தடுப்பூசிகள் செல்லப்பிராணிகள் அனைத்துக்கும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இந்த வைரஸ் நோய்கள் உள்பட விலங்குகளுக்கு அதிகம் பரவும் என்பதால் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments