Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: உறுதி செய்தது வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: உறுதி செய்தது வானிலை ஆய்வு மையம்!
, வியாழன், 22 ஜூலை 2021 (08:55 IST)
வங்கக்கடலில் இன்னும் ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது 
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு இருக்காது என்றும் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை மற்றும் பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதை அடுத்து தெலங்கானா ஆந்திரா மகாராஷ்டிரா சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்கள் 100% பள்ளிக்கு வரவழைக்க முடிவு!!