Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டம் … மோடி அழைப்பு !!

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (13:51 IST)
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்திய அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதுதொடர்பாக காணொலி மூலம் பாரத பிரதமர், மாநில முதல்வர்களுடனும், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்நிலையில், உள்நாட்டு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார் . தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளதாகவும்செய்திகள் வெளியாகின்றன.
 
மேலும், பிரதமர் மோடி, தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து ஸ்டாலிடன் நலம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments