Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (14:57 IST)
நாடாளுமன்ற இரு அவைகளும் இரண்டாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


நேற்று முதல் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கைகளில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இயல்பான நடைமுறை நடைபெறவில்லை.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடிய போது விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கம் தொடர்ந்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு.. மோடியின் வாரணாசி தொகுதியில் தேர்தல்..!

என் பெயரை தான் பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தார்கள், ஆனால்.. கார்கே பேட்டி..!

சிலிண்டர் விலை இன்று முதல் குறைவு.. வழக்கம்போல் குடும்ப தலைவிகள் அதிருப்தி..!

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பென்ட் ரத்து.. முதல்வர் தலையிட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments