Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னாகும் பட்ஜெட் கூட்டத்தொடர்? நாடாளுமன்ற வளாகத்தில் பலருக்கு கொரோனா!

என்னாகும் பட்ஜெட் கூட்டத்தொடர்? நாடாளுமன்ற வளாகத்தில் பலருக்கு கொரோனா!
, ஞாயிறு, 9 ஜனவரி 2022 (13:22 IST)
நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 402 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது. இதேபோல ஒமிக்ரான் பாதிப்புகளும் அதிகரிக்க துவங்கியுள்ளது. 
 
இந்நிலையில் ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 1,409 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 402 பேருக்கு கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை!