Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (16:06 IST)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பிற்கு பிறகு கூட்டப்படும் கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடி அமைச்சர்கள் பட்டியல் அறிக்கையை வாசிக்க இருந்தார்.

இந்நிலையில் செல்போன் தகவல் திருட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்து அமளி எழுப்பிய எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை பேச விடாமல் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை தொடங்கிய நிலையில் செல்போன் வழியாக உளவு பார்த்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கமளித்தும் தொடர் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சிகள் அவை தலைவர் அருகே சென்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments