Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (19:00 IST)
குஜராத் எல்லையில், இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மா நிலத்தில் முதல்வர் பூபேனந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநில எல்லையில், இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்பு படையினர்  நேற்று கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா என்ற மாவட்டத்தில் உள்ள பார்டர் அவுட் பகுதியில்( BOP) அருகேயுள்ள வாயில் மீது ஏறிக்குதித்த நபர் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார்.

அப்பகுதியைக் கண்காணித்துக் கொண்டடிருந்த  இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் அந்த நபரைக் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, அவர் பாகிஸ்தான் நாட்டிலுள்ள நகர்பார்க்கர் என்ற பகுதியில் வசித்து வந்ததாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் என்ன நோக்கத்திற்காக இந்தியாவுக்குள் நுழைய முயன்றார் என்று  அவரிடம் தீவிரமான விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments