Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டல் கடிதத்துடன் தூது வந்த புறா: பாகிஸ்தான் டூ இந்தியா

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (14:39 IST)
பாகிஸ்தானில் இருந்து மோடிக்கு எச்சரிக்கை விடுத்து எழுதப்பட்ட மிரட்டல் கடிதத்துடன் வந்த புறா சிக்கியது.


 

 
பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் கடிதம் எடுத்து வந்த புறா சிக்கியது.
 
இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 38 பேரை கொன்றது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
 
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த சாம்பல் நிற புறா ஒன்று எல்லை பாதுகாப்பு படையினரிடம் நேற்று சிக்கியது. 
 
அந்த புறா பாகிஸ்தானில் இருந்து தூது வந்தது. அதன் கால்களில் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை படித்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அந்த கடிதத்தில், 1971-ம் ஆண்டு இருந்தவர்களைப் போல் எங்களை மோடி எண்ண வேண்டாம். தற்போதுள்ள நாட்டில் ஒவ்வொரு சிறுவனும், இந்தியாவுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறான் என்று எழுதப்பட்டு இருந்தது.
 
இதுகுறித்து பதன்கோட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. ஆன் தி ஸ்பாட்டில் மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!

மீண்டும் வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்.. இம்மாத இறுதியில் இன்னொரு ராக்கெட்..!

பள்ளி சிறுமி பலி! கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு! - சென்னை கமிஷனர் உத்தரவு!

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்: தமிழக அரசு திட்டவட்டம் - உச்ச நீதிமன்றத்தில் பதில்!

2013ல் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளம்.. 12 ஆண்டுகளாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 702 உடல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments