Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

Mahendran
புதன், 7 மே 2025 (12:13 IST)
“நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் போரை தவிர்க்க வேண்டுமானால், பாகிஸ்தான் தங்களுடைய துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்,” என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து அவர் கூறும்போது, “நாம் யாருமே போரை விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீரில் நிலைமை மேம்பட  வேண்டும்  என்று தான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அதற்காக, நமது அண்டை நாடான பாகிஸ்தான் தங்களது துப்பாக்கிகளை கீழே வைக்க வேண்டும்,” என்றார்.

“அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகத்தான் மத்திய அரசு இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. இதுதான் சரியான பதிலடி முறை என்பது என் கருத்து. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன. ராணுவ அமைப்புகளுக்கோ பொதுமக்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை,” என்றார்.

“பாகிஸ்தான் போரை தவிர்க்க விரும்புகிறதானால், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்,” என்று உமர் அப்துல்லா வலியுறுத்தினார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வீரனின் போர் தொடங்கிவிட்டது! - பிரதமர் மோடியை குறிப்பிட்டு ரஜினிகாந்த் ட்வீட்!

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! தவெக தலைவர் விஜய்..!

ஆபரேசன் சிந்தூர்: 80 பயங்கரவாதிகள் பலி.. மலைபோல் குவிக்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு..!

போர்க்கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி, நள்ளிரவில் தாக்கிய இந்தியா.. அசத்தல் திட்டம்..!

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments