Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்கிய சீனா; அத்துமீறும் பாகிஸ்தான்! – பதிலடி பணியில் இந்தியா!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:42 IST)
சமீபத்தில் இந்தியா –சீனா இடையேயான மோதலால் ஏற்பட்ட போர் பதற்றம் தணிந்துள்ள சூழலில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருவது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் பகுதியில் இந்தியா – சீனா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருதரப்பு வீரர்களும் உயிரிழந்த நிலையில் சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் இருதரப்பு ராணுவங்களும் திரும்ப பெறப்பட்டன. எனினும் சீனாவிற்கு பதிலடி தரும் விதமாக சீன செயலிகளை ரத்து செய்வது, கட்டுமான ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்களை விலக்கியது என இந்தியா தனது பதிலடியை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது சீனாவின் அத்துமீறல்கள் குறைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடுகளை நடத்தி வருகிறது. இந்திய எல்லைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments