Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

17 பேர் மரணம், பலர் கவலைக்கிடம்: வேதனையளிக்கும் கோழிக்கோடு விமான விபத்து!

Advertiesment
17 பேர் மரணம், பலர் கவலைக்கிடம்: வேதனையளிக்கும் கோழிக்கோடு விமான விபத்து!
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.
 
விமானத்தில் பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. விமான விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளுக்கு நாள் கூடும் எண்ணிக்கை: 1,95,41,219 ஆக உலக பாதிப்பு!!