Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவால் பாகிஸ்தானுக்கு அதிக சேதம்.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எந்த சேதமும் இல்லை: அமெரிக்க பத்திரிகை

Siva
வியாழன், 15 மே 2025 (07:45 IST)
காஷ்மீரில் உள்ள பகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான இடையே போர்ச் சூழல் ஏற்பட்டது என்பதும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் என்பதும் தெரிந்தது.
 
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு அதிக சேதம் ஏற்பட்டதாகவும், இந்தியாவுக்கு எந்தப் பெரிய சேதமும் இல்லை என்றும் அமெரிக்கப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள அணு உலை அருகே இந்தியா தாக்குதல் நடத்தியதால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது என்றும், பாகிஸ்தானில் உள்ள பல ராணுவத் தளவாடங்கள் இந்தியாவால் தாக்கப்பட்டன என்றும் அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், இந்தியாவின் ரபேல் உள்ளிட்ட சில ஏவுகணைகளை பாகிஸ்தான் தாக்கியதாக கூறியது அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், இந்தியாவுக்கு எந்தப் பெரிய சேதமும் இந்த மோதலில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
இதனால், பாகிஸ்தான் பிரதமர் உள்பட பாகிஸ்தான் ராணுவம் அதிகாரிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய, இந்தியாவுக்குச் சேதம் என்ற செய்திகள் அனைத்தும் பொய் என்பது நிறுவப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments