அயோத்தியில் நுழைந்த பாக். பயங்கரவாதிகள்... உளவுத்துறை எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (17:26 IST)
அயோத்தியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியிருக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்த நிலையில், ஜார்க்கண்டில் பாக்கூர் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எண்ணி 4 மாதங்களில் அயோத்தியில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்தார். 
 
ஆனால், இப்போது அயோத்தியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியிருக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இது குறித்து வெளியாகியுள்ள தகவல் பின்வருமாறு.... 
 
அயோத்தியில் தாக்குதல் நடத்துமாறு சமூக வலைதளம் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வீடியோ மத்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
மேலும், பாகிஸ்தானிலிருந்து 7 பயங்கரவாதிகள் நேபாள எல்லை வழியாக  உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், அயோத்தியில் ஊடுருவி பதுங்கி இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments