Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு: நாளை ப.சிதம்பரம் விடுதலை ஆவாரா?

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (21:25 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மற்றும் ஜாமீன் கிடைக்காத காரணத்தால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை உள்ளது.
 
 
இந்த நிலையில் தற்போது ப.சிதம்பரம் தரப்பில் இருந்து புதிய மனு ஒன்று டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திகார் சிறை காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான விசாரணை நாளை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
மேலும் நாளை காலை இந்த மனு மீதான விசாரணையும், சிபிஐ காவலுக்கு திஎதிரான மனு மீதான விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் அவர்களின் புதிய இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் திகார் சிறையில் இருந்து அவர் வெளியே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ப.சிதம்பரத்தின் இந்த மனுவிற்கு சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments