Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரத்திற்கு மேலும் பின்னடைவு... கைது செய்யுமா அமலாக்கத்துறை??

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (11:47 IST)
ஐ என் எகஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் ,ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் இது குறித்து தொடர்ந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து ப சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் படி ஐ என் எக்ஸ் மீடியா வழக்குகள் சரியான பாதையில் செல்வதால் ப சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது எனவும், மேலும் விசாரணைகளுக்கு ப சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனால் ப சிதம்பரம் அமலாக்கத்துறையால் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments