Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய முதலாளி

பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய முதலாளி

Advertiesment
பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய முதலாளி
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (13:07 IST)
புதுவையில் பெண் ஊழியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி தொல்லை கொடுத்தாக தொழில் அதிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
புதுவை கதிர்காமத்தை சேர்ந்த பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றி வருகிறார்.
 
இந்த பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். வந்ததுள்ளது. அவர் வேலை செய்யும் தொழிற்சாலையின் உரிமையாளர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அறிந்த அந்த பெண் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.
 
இதுபற்றி அவர் தனது முதலாளியிடம் கேட்டுள்ளார். உடனே தொழிற்சாலையின் உரிமையாளர், காவலாளியிடம் கூறி அந்த பெண்ணின் செல்போனை பறித்து அதில் பதிவாகி இருந்த எஸ்.எம்.எஸ்.களை அழித்துள்ளார். 
 
மேலும் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்தியர்: சிறையில் அடி உதை