Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் மசோதா நகலை கிழித்தெறிந்த எம்பியால் பரபரப்பு

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (21:28 IST)
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து  மதபாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய  சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுகுறித்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
இந்த மசோதா மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளித்துள்ள நிலையில் இதில் இஸ்லாம் இல்லாததை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
 
இந்த நிலையில் மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ‘இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், நாட்டை மற்றொரு பிரிவினைக்கு உள்ளாக்கும் நோக்கம் கொண்டது என்றும் ஓவைசி ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments