Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் பயணம் செய்ய ஒரிஜினல் அடையாள அட்டை தேவையில்லை...

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (13:31 IST)
இனிமேல் பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் போது, ஒரிஜினல் அடையாள அட்டை எடுத்து செல்ல தேவையில்லை என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 
ஆன்லைனில் டிக்கெட்  முன்பதிவு செய்யும் பயணிகள் இதுவரை ஆதார், ஓட்டுனர் உரிமை அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. தற்போது அது தேவையில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.
 
அதாவது. மத்திய அரசின் டிஜி லாக்கர் என்கிற மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம். டிக்கெட் பரிசோதகரிடம் இந்த டிஜிட்டல் ஆவணங்களை காட்டினாலே போதுமானது. ஒரிஜினல் ஆதார் அட்டை அல்லது மற்ற அடையள அட்டை எதையும் காட்ட தேவையில்லை என மத்திய ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
ஆனால், ஸ்மார்ட்போன் பயனபடுத்தாத பயணிகள், அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments