Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து பெய்து வரும் மழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தொடர்ந்து பெய்து வரும் மழை:  3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
, சனி, 29 ஏப்ரல் 2023 (12:50 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை எடுத்துள்ளது. கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பாலக்காடு இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கன மழை தொடரும் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவது மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு