Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

Prasanth Karthick
வியாழன், 20 மார்ச் 2025 (11:20 IST)

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாட்டை குறைக்க புதிய விதிமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் வீடுகள், ஹோட்டல்கள் என பெரும்பாலான பகுதிகளில் சமையல் வேலைக்கு கேஸ் சிலிண்டர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப வீட்டு உபயோக சிலிண்டர், வணிக சிலிண்டர் என இருவகை சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன.
 

ALSO READ: ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!
 

கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்ஜுவாலா திட்டம், மாநில அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றால் மக்களுக்கு அதிகமான கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான அளவு கேஸ் சிலிண்டர் விநியோகத்திலும் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் சிலிண்டர்களை வாங்கி அதை இணைப்பு பெற முடியாத பலருக்கு விற்பனை செய்து வருவதாகவும் புகார்கள் உள்ளது.

 

அதனால் மக்களின் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை வரையறை செய்யும் படியாக ஆண்டுக்கு ஒரு இணைப்புக்கு 15 சிலிண்டர்கள் வரை மட்டுமே பெற முடியும் என கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்கு மேல் தேவைப்பட்டால் உரிய காரணத்தை கடிதமாக அளித்தால் மேற்கொண்டு சிலிண்டர்களை பெறலாம் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

4வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் 80,000ஐ தாண்டுமா சென்செக்ஸ்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?

அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments