Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:58 IST)
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் அரசு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் அனைத்து வகையான ஆன்லைன் சட்டத்திற்கு தடை விதித்து சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. 
 
சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நேற்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த சட்டத்தின்படி பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சத்தீஸ்கர் மாநில கவர்னர் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments