Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:58 IST)
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் அரசு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் அனைத்து வகையான ஆன்லைன் சட்டத்திற்கு தடை விதித்து சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. 
 
சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நேற்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த சட்டத்தின்படி பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சத்தீஸ்கர் மாநில கவர்னர் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments