Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மாபியா கும்பலின் அட்டூழியம் : ஒருவர் சுட்டுக் கொலை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:00 IST)
நம் தேசத்தின் தலைநகரான டெல்லியில் புற்றீசலைப்போல தற்போது போதை பொருள் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒருநாளில் சராசரியாக  சில லட்சங்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களைக் குறிவைத்து இந்த போதைக் கும்பல் செயல்படுவதாகவும் தெரிகிறது.
 
தற்போது இந்த போதைக்கு எதிராக போராடி  வருகிற தைமூர் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ரூபேஷ் குமார் இந்த போதைக் கும்பலால் சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
இவர் போதை பொருள் விற்கும் மாபியா கும்பலுக்கு எதிராக செல்பட்டதால்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
டெல்லியில் குறிப்பாக போலீஸார் அதிகம் இருக்கும் பகுதியில் ரூபேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் போலீஸார் இந்த படுகொலை குறித்து தீவிரமாக விசாரித்து  வருகின்றனர்.விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments