Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீஷ் சிசோடியா உட்பட 7 பேர் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (18:57 IST)
டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து, முன்னாள் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவை  சிபிஐ காவலில் விசாரிக்க வேண்டுமென சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மணீஸ் சிசோடியா உட்பட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு புதிய வழக்கைப்பதிவு செய்துள்ளது சிபிஐ.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, சொத்துக்குவிப்பு, போலி ஆவணம் தயாரித்தல், அவற்றை ஏமாற்றும் நோக்கத்திற்குப் பயன்படுத்துதல்,  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணீஸ் சிசோடியா மீது மேலும் ஒரு புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமரை ஏற்காத திமுகவுடன் கூட்டணி ஏன்? காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளுக்கு அனுராக் தாக்குர் கேள்வி

கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திருட்டு.. ஒடிசாவை சேர்ந்த ஒருவர் கைது..!

சிக்கன் சமைக்க வேண்டாம்.. மனைவி பேச்சை கேட்காத கணவர்.. பரிதாபமாக பலியான உயிர்..!

ஒரே நாளில் இனி ₹10 லட்சம் யூபிஐ-யில் பரிவர்த்தனை செய்யலாம்.. தனி நபருக்கு எவ்வளவு?

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. 53 நாட்களுக்கு பின் வெளியே வந்த ஜகதீப் தன்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments