Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ விலகல்: அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
சனி, 4 மே 2019 (21:48 IST)
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க விரும்பியது. ஆனால் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
 ஏற்கனவே கடந்த மாதம் 29ஆம் தேதி மான்சா தொகுதி எம்.எல்.ஏ நாசர்சிங் ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் இன்று பஞ்சாப் மாநிலம் ரூபாநகர் தொகுதி எம்.எல்.ஏ அமர்ஜித்சிங் சந்தோ என்பவர் ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்கள் இருவர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது
 
 ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அமர்ஜித் சிங் சந்தோ கூறியபோது, 'ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி மிகுந்த அடக்குமுறை உணர்வுடன் செயல்படுகிறது. மக்களை நோக்கிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியால் அக்கட்சியில் இணைந்துள்ளேன் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் மர்ஜித் சிங் சந்தோவின் வருகையை வரவேற்றுள்ள அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் வலுவடைந்துள்ளது கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments