Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 3 ஜூன் 2025 (07:10 IST)
மத்திய உள்துறை அமைச்சகம், ஓய்வு பெறும் நாளில் ஒரே ஒரு நாள் மட்டும் மதிக்கும் வகையில் பதவி உயர்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பதவி உயர்வு கௌரவத்திற்காக மட்டுமே என்றும், ஓய்வூதியம் உள்பட வேறு எந்த சலுகைகளும் இல்லை என்றும் கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
நீண்ட காலமாக ஒரே துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு, "ஒரு நாள் ஓய்வு திட்டம்" குறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கீழ் இயங்கும்  மத்திய ஆயுத போலீஸ் படை துறையில் நீண்ட காலமாக கான்ஸ்டபிள் முதல் சப் இன்ஸ்பெக்டர் வரை பணிபுரிபவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
 
இது, அவர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் பதவி உயர்வு எனவும், எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ அந்த ஒரு நாளுக்கு மட்டும் இந்த பதவி உயர்வு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த சலுகையும் இந்த பதவி உயர்வால் அவர்களுக்கு கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த பிரிவுகளில் அனைவருக்கும் இந்த பதவி உயர்வு இல்லை என்றும், ஐந்தாண்டு காலம் அவர்களது ரிப்போர்ட் சரியாக இருந்தால் மட்டுமே இந்த ஒரு நாள் பதவி உயர்வு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் எந்த தண்டனையும் பெற்றிருக்கக் கூடாது என்பது போன்ற சில வரைமுறைகளும் இந்த ஒரு நாள் பதவி உயர்வுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments