Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெற்றோரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

பெற்றோரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை
, சனி, 3 பிப்ரவரி 2018 (12:29 IST)
மத்திய பிரதேசத்தில் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை, தெரு நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வசித்து வருபவர் சிராஜ். இவருக்கு ஷேக் ரஸா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர், குழந்தையை கவனிக்காமல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த தெரு நாய்க்கள் குழந்தையை கடித்து, 50 அடி துாரம் இழுத்து சென்றன.

இதையடுத்து  சற்று நேரம் கழித்து குழந்தையை காணாததால், பெற்றோர்கள் அக்கம் பக்கம் தேடினர். வீட்டினருகே குழந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இச்சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கோர சம்பவம் அந்த பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களிடம் சிக்கிக்கொண்ட தினகரன்: பெருகும் ஆதரவு!