Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரை சுற்றிய ஒமிக்ரான் நோயாளி: கேரளாவில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:26 IST)
ஒமிக்ரான் வைரஸால் பாதிப்படைந்த நோயாளி ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர் ஊரைச்சுற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கடுமையான விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கேரளாவில் சமீபத்தில் 37 வயதான நபர் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர் விதிகளை மீறி ஷாப்பிங் மால் உணவகங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளதாக மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது 
 
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள மாநில சுகாதாரத்துறை அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் அவர் சென்ற இடங்களில் உள்ள நபர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments