Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரை சுற்றிய ஒமிக்ரான் நோயாளி: கேரளாவில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:26 IST)
ஒமிக்ரான் வைரஸால் பாதிப்படைந்த நோயாளி ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர் ஊரைச்சுற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கடுமையான விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கேரளாவில் சமீபத்தில் 37 வயதான நபர் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர் விதிகளை மீறி ஷாப்பிங் மால் உணவகங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளதாக மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது 
 
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள மாநில சுகாதாரத்துறை அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் அவர் சென்ற இடங்களில் உள்ள நபர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments