Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரில் பிரசவித்த பெண்ணிற்கு 5 வருட இலவச பயணம் - ஓலா அதிரடி அறிவிப்பு

காரில் பிரசவித்த பெண்ணிற்கு 5 வருட இலவச பயணம் - ஓலா அதிரடி அறிவிப்பு
, வெள்ளி, 6 அக்டோபர் 2017 (14:18 IST)
ஓலா காரில் குழந்தையை பிரசவித்த பெண்ணிற்கும், குழந்தைக்கும் அந்த கார் நிறுவனம் 5 வருடம் இலவச பயணத்தை பரிசாக அளிக்க முன்வந்துள்ளது.


 

 
புனேவைச் சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் சிங் - கிஷோரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிஷோரிக்கு, கடந்த அக்டோபர் 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அதையடுத்து, அருகில் இருந்த கமலா நேரு மருத்துவமனைக்கு செல்ல, ஓலா காரை புக் செய்தார் ரமேஷ் சிங்.
 
ஆனால், காரில் செல்லும் போது கிஷோரிக்கு வலி அதிகமானது. அதைத் தொடர்ந்து காரிலேயே அவருக்கு பிரசவமும் ஏற்பட்டது. இதையடுத்து, வண்டியை கவனமாக ஓட்டிய ஓட்டுனர், விரைவாக மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றார். தாயும், சேயும் அங்கு நலமாக இருக்கின்றனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாய் கிஷோரிக்கும், அவரது குழந்தைக்கும் ஒரு சிறப்பு கூப்பனை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதன் மூலம், அவர்கள் இருவரும் அடுத்த 5 வருடங்கள் ஓலா காரில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெடிக்கல் மிராக்கிள் : ஒரே நேரத்தில் தாய்க்கும் மகளுக்கும் பிரசவம்