Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரி ஏய்ப்புக்கு உதவிய வருமான வரித்துறை அதிகாரிகள் – கட்டாயப் பணி ஓய்வு !

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (14:45 IST)
வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தண்டனையாக கட்டாயப் பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரி ஏய்ப்புக்கு உதவியது போன்ற முறையற்ற காரியத்தில் ஈடுபட்ட இந்திய வருவாய் துறை உள்ளிட்ட பலதுறை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி விதிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அதிகாரிகளின் துணையுடன் நடைபெறும் வரி ஏய்ப்பு முறைகேடுகளை கண்டுபிடிப்பது சவாலான காரியமாக இருந்து வருகிறது.அதுபோல குற்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 15 அதிகாரிகளும், ஜூன் மாதத்தில் மறைமுக வரி மற்றும் சுங்க வரி ஆணையத் தைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கும், ஜூலையில் 12 அதிகாரிகளுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 22 அதிகாரி களுக்கும் கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments