Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற முயற்சி! – 6 பேர் உயிரிழந்த சோகம்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:21 IST)
ஒடிசாவில் ஹோலி பண்டிகை கொண்டாடி விட்டு குளிக்க சென்ற நண்பர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் நண்பர்கள் சிலர் ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு கரஸ்ரோட்டா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். இதனை கவனித்த மற்றொருவர் அவரை காப்பாற்ற சென்று அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.

இப்படியாக ஒருவரை காப்பாற்ற மற்றொருவர் என 6 பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு மீட்பு படையினர் 3 உடல்களை மீட்டுள்ளனர், மீத உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஒரு மாணவியின் பதிவு காரணமாக தேசிய நலனே பாதிக்கப்பட்டுவிடுமா? நீதிமன்றம் சரமாரி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments