Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வெயில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாநிலம்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:34 IST)
கடும் வெயில் காரணமாக ஒடிசாவில் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ஆம், நாடு முழுவதும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருவதால் ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பதாக அறிவித்துள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
வருடாந்திர மெட்ரிகுலேஷன் தேர்வு ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்கி, மே 7 வரை நடைபெறும். CHSE-ஆல் நடத்தப்படும் 12 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறும். முன்னதாக, ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை 11 நாட்களுக்கு கோடை விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments