Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊழலில் ஈடுபட்ட 152 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: அரசு அதிரடி

Advertiesment
ஒடிசா
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (07:47 IST)
ஊழலில் ஈடுபட்ட 152 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: அரசு அதிரடி
லஞ்சம் ஊழலில் ஈடுபட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 152 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரி உள்பட லஞ்ச ஊழல் விவகாரங்களில் 152 அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் அனைவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
 
வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொகுசு கார்கள் வைத்து இருந்ததாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்தநிலையில் அனைவரையும் பணி நீக்கம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!