Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’48 ஆயிரம் பேருந்து ஊழியர்கள்’ டிஸ்மிஸ் : முதல்வர் அதிரடி உத்தரவு !

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (12:19 IST)
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அரசு பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம், பேரை முதலவர் சந்திரசேகரராவ் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ள சம்பவம் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக உருவானது. அதற்கு முக்கிய காரணம் சந்திரசேகர ராவ். எனவே அம்மாநிலத்தில் முதல் முதல்வராக அவர் பதவியேற்று, தற்போது 2 வது முறையாக முதல்வராக தொடர்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசு பேருந்து ஊழியர்கள் , ’அரசு ஊழியகளுக்கு இணையான சம்பளம் வேண்டும், சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வந்தனர்.
 
அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை அன்று மாலை வரை போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்ப உத்தர இறுதி கெடு விதித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை விடவில்லை.
 
இதனையடுத்து முதல்வர் அம்மாநில உயரதிகாரிகளை ஆலோசித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments