Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் மாநிலத்தில் அணுகுண்டு வைக்கத் திட்டம்:யாசின் பட்கல் மீது வழக்குப் பதிவு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (21:04 IST)
குஜராத் மாநிலத்தில் அணுகுண்டு வைக்கத் திட்டமிட்ட  இந்திய முஜாகிதீன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மீது வழக்குப் பதிவு செய்ய என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முஜாகிதீன் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சிலர் சுஜராத் மா நிலத்தில் உள்ள சூரத் நகரில் முஸ்லிம்களை  வெளியேற்றிவிட்டு, அணுகுண்டு ஒன்றை நகரில் வைத்து வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாக என்.ஐ.ஏ  நீதிமன்றத்தில் கூறியது.

இதையடுத்து, பயங்கரவாத செயல்களை செய்ய , பிற குற்றவாளிகளுடன் பட்கல் தொடர்பு கொண்டு, நேபாளத்தில் உள்ள  மாவோயிஸ்டுகளின் உதவுடன் ஆயுதங்களுடன் வெடிப்பொருட்களைச் சேகரித்து, பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே, இந்திய முஜாகிதீன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகள்  மீது வழக்குப் பதிவு செய்ய என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments