Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்., 7ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (19:51 IST)
வரும் 7ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து  பல போராட்டங்களைக் கடந்து, அதிமுகவின் பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

சமீபத்தில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்ட நிலையில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில்,  வரும் 7ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் உசேன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments