Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
, ஞாயிறு, 16 மே 2021 (07:29 IST)
கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சிகிச்சையை கைவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ரத்தத்தில் உள்ள எதிரணுக்களை பிரித்து எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் செலுத்தும் சிகிச்சை முறைக்கு தான் பிளாஸ்மா சிகிச்சை என்ற பெயர். இந்த சிகிச்சை கொரோனா முதல் அலையின்போது தீவிரமாக செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் இந்த சிகிச்சை முறையை கைவிட முடிவு செய்திருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது தடுப்பூசி மருந்து,ரெம்டெசிவிர் உள்பட பல்வேறு சிகிச்சை முறைகள் வந்து விட்ட நிலையில் பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை என்ற முடிவை இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு அரசே காரணம்: ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு